அவுஸ்திரேலிய ஆயர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டுள்ளது. அவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .
சிட்னிக்கு மேற்கே சுமார் 30 கிமீ (18 மைல்) தொலைவில் உள்ள வேக்லியில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது ஆயர் தாக்கப்பட்டார். மேலும் பலர் கத்திக்குத்தில் காயம் அடைந்தனர்.
சம்பவத்தின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் மற்றும் அவர் விசாரணைகளில் பொலிஸாருக்கு உதவுகிறார் என்று பொலிஸ் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களுக்குள் அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட இரண்டாவது கத்திக்குத்து சம்பவம் இதுவாகும்.