குஜராத் மாநிலம் போர்பந்தரில் பயிற்சியின் போது, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர்.
வழக்காமன பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து, கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.