யாழ். மாவட்ட சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் குழுவொன்று விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த குழுவினர் இன்று (16.7.2024) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
வடக்கு சுகாதாரத்துறையில் காணப்படுவதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்தியர் அர்ச்சுனா அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று சுகாதார அமைச்சின் குழுவொன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.