தேங்காய் திருடியவர் மீது துப்பாக்கிச்சூடு

0

மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம பிரதேசத்தில் தேங்காய் திருடிய நபர் ஒருவரை காவலாளி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights