பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் நேற்று (17) யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத்தூபி முன்பாக இடம்பெற்ற பொங்குதமிழ் பிரகடன உரையினை தொடர்ந்து பொங்குதமிழ் தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் மாணவர்கள், யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.